செந்தில் பாலாஜிக்கு விழுந்த அடி.. முக்கிய பொறுப்பு பதவியும் பறிப்பு.. தமிழக அரசு ஆணை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட இப்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்பொழுது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் விசாரணையில் இருந்து வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அமைச்சரவையில் இலக்கா இல்லாத அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி நீடித்து வருகிறார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நல குறைவை காரணம் காட்டி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தற்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த பதவி பறிப்பானது அரசியல் ரீதியிலும், கட்சி ரீதியிலும் செந்தில் பாலாஜிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthuswamy appointed as Coimbatore district incharge minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->