வாக்குப்பதிவு நடந்த மறுநாளே வேட்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் பாஜக தரப்பு!!
Moradabad BJP candidate passed away
நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி ஒரே கட்டமாக நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலின் போது உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத் மக்களவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.
English Summary
Moradabad BJP candidate passed away