சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் இது நிச்சயம் நடக்கும்.. எம்எல்ஏ கருணாஸ் பேட்டி.!!
mla karunas press meet about sasikala
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலா விடுதலை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சசிகலா இம்மாதம் இறுதியில் விடுதலை ஆவாரா.? அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆவாரா.? என்ற கேள்வி தற்போது தமிழகத்தில் எழுந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.தற்போது சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சிறைக்குச் சென்று சந்தித்து வருகின்றனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார். சசிகலா நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா இம்மாதம் இறுதியில் வெளியே வருவார் என வழக்கறிஞர் ராஜா செந்தூரப் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எம்எல்ஏ கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு ஏற்படும். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் தான் தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது என கூறினார்.
English Summary
mla karunas press meet about sasikala