மதுரைக்கு இவர்களது ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை - சரவணன் தாக்கு.!
Madurai admk Saravanan campaign
மதுரை, பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆலத்தூர், சந்திரபட்டி, ஆலங்குளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் சரவணன் பிரசாரத்தின் போது பேசி இருப்பதாவது,
அ.தி.மு.க ஆட்சியின் போது மதுரை கிழக்கு தொகுதியில் ஆயிரம் கோடி மதிப்பில் மதுரை-நத்தம் சாலை அமைக்கப்பட்டது. மக்களின் நிர்வாக வசதிக்காக மதுரை கிழக்கு தொகுதியில் புதிய வட்டம் அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 3 ஆண்டு காலமாக தி.மு.க ஆட்சியில் மதுரையில் எந்த திட்டம் கொண்டுவரவில்லை. கடந்த தேர்தலில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
எனவே மதுரைக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் போது அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர், மாவட்ட இளைஞரணி செயலாளர், மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
English Summary
Madurai admk Saravanan campaign