மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடக்கம்.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் மொத்தம் 950 பேர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர். 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை சமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி வருகின்ற 14ஆம் தேதி உடன் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Elections Booth Slip giving work started


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->