நிதிஷ்குமார் பதவிக்கு ஆப்பு.!! முதல்வர் நாற்காலிக்கு குறி வைக்கும் லாலு மகன்.!! - Seithipunal
Seithipunal


பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் 11 எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நிதிஷ்குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிதிஷ்குமார், தனது முதல்வர் பதவியை இழக்கும் நிலைமை நேரிடும். 

பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 எம்எல்ஏக்களும் , நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 எம்எல்ஏக்களும் , காங்கிரஸ் 19 எம்எல்ஏக்களும், இடதுசாரிகள் 16 எம்எல்ஏக்களும், சுயேட்சை 1 எம்எல்ஏவும், பாஜக 78 எம்எல்ஏக்களும், ஹெச்ஏஎம்எஸ் 4எம்எல்ஏக்களும் உள்ளனர். தற்போதைய நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள்  கூட்டணியில் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு 7 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் நிதிஷ்குமார் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தாலோ அல்லது கலக குரல் எழுப்பியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ பீகார் சட்டசபை பலம் 243ல் இருந்து 229ஆக குறையும். அப்போது பெரும்பான்மைக்கு தேவை 115 எம்எல்ஏக்களாக இருக்கும்.

அவ்வாறு நடந்தால் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு இன்றி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பீகார் புதிய முதல்வர் பதவியை கைப்பற்றுவார். இந்த வியூகத்துடன் லாலுவின் கட்சி களமாடுவதாக பீகார் மாநில அரசில் வற்றறன்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பாஜக எம்எல்ஏக்கள் பேரத்தில் சிக்கிவிட கூடாது என்பதற்காக உடனடியாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு அனுப்பும் நடவடிக்கையில் பாஜக இறங்கிவிட்டது. இதனால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu son Tejashwi moves for Bihar CM post


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->