டோராண்டா கருவூல மோசடி வழக்கில், லாலு பிரசாத் யதாவுக்கு ஜாமீன்.!
LALU PRASAD YADAV CASE bail
மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கான தண்டனையும் உறுதிசெய்யப்பட்டது.
டோராண்டா கருவூலத்திலிருந்து 139 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தண்டனை வழங்கப்பட்டது. மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.
ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், சிறை தண்டனை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் ஜாமின் வழங்கக்கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
English Summary
LALU PRASAD YADAV CASE bail