#தமிழகம் | வழக்கு ஆவணங்கள் மாயம் - அதிர்ந்துபோன நீதிபதி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவல் சூப்பிரண்டு ஒருவருக்கு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த வழக்கு நேற்று நீதிபதி புஷ்பராணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட சுங்கச்சாவடியை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் நேரில் வந்து சாட்சியம் அளித்தனர். இதனை அடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

இதற்கிடையே பெண் காவல் அதிகாரி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி மற்றும் பெண் காவல் அதிகாரி அதிகாரியின் ஆடியோ உரையாடல் மற்றும் வாட்ஸ்-அப் மெசேஜ் திடீரென மாயமாகி இருந்தது. 

இதனை அடுத்து மாயமான ஆவணங்களின் நகலை வருகின்ற 25-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lady police abuse case court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->