மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி வெட்டி படுகொலை.!
kerala Marxist communist executive murder
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொட்டேகாட்டை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மருதாரோடு பகுதி நிர்வாகியாக இருந்தார். இவர் நேற்று இரவு குன்னங்காடு பகுதியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஷாஜகானை வழிமறித்து சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஷாஜகான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து அப்பகுதி மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், ஷாஜகான் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து ஷாஜகானுக்கு, சமூக வலைதளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
kerala Marxist communist executive murder