நினைப்புதான் பொழப்பை கெடுக்குது! தமிழிசைக்கு எதிராக காயத்ரி போட்ட ட்வீட்!
kayathri tweet against tamilisai sowndarajan
தமிழ் சினிமாவில் சார்லி சாப்ளின், விசில் போன்ற படங்களில் மூலம் நடிகையாக வலம் வந்தவர் பிரபல நடனஇயக்குனர் காயத்ரி ரகுராம். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கோபத்தாலும், தான் நடந்துகொண்ட விதத்தாலும் மக்களின் வெறுப்பிற்கு ஆளானார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடித்து விட்டு கார் ஓட்டியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அப்போது அவர் தான் 'இருமல் மருந்து குடித்ததாகவும், அதில் இருந்த ஆல்கஹாலே வாகனச் சோதனையில் தெரிய வந்தது என கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி ஒன்றில் பேசியததால், அவருக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜக குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் சிலருக்கு. தாங்களாகவே யூகித்துக் கொண்டு தவறான செய்திகளைப் பரப்புவார்கள். அதனால் தான் மற்றவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பார்கள். நான் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறேன். இதைப் பற்றி யார் விவாதிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அதைப் பண்ணட்டும். ஆனால், நான் தமிழிசை மேடத்தின் ஆதரவாளர் இல்லை. சிம்பிள்" என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
kayathri tweet against tamilisai sowndarajan