ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல்.. மக்கள் நீதி மய்யம் இந்த கட்சிக்கு தான் ஆதரவு.?!
Kamalhassan MNM About erode By Election
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியானது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 31-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. அடுத்த முறையும் இதில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தான் திமுக சார்பில் போட்டியிட போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருதரப்பும் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகிவிட்டது நாம் தமிழர் கட்சி அமமுக ஆகிய கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தயாராகிவிட்டது இத்தகைய நிலையில் இதில் மக்கள் நீதி மையம் கட்சி தன்னுடைய நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது
நாளை நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்த முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம். இதே தொகுதியில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி 10000 ஓட்டுகளை பெற்றது.
காங்கிரஸ் 9000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மக்கள் நீதி மய்யம் பிரித்த ஓட்டுக்கள் தான் அதிமுக -பாஜக கூட்டணி கட்சிகள் தோல்வியடைய காரணமாக இருந்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர். இத்தகைய சூழலில், சமீபத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு கமலஹாசன் ஆதரவளித்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kamalhassan MNM About erode By Election