மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு.. ஈபிஎஸ் விமர்சனம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட உள்ளது. 

இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றுவருகிறது. விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் வழங்குவார். காலை 10 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சொத்து வரி குறித்து கேள்வி எழுப்பியது. இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஏழை, எளிய அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 83 சதவீத மக்களை சொத்து வரி உயர்வு பாதிக்காது.

கட்டடங்களின் பரப்பளவு வாரியாக வகை பிரித்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை திமுக அரசு மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காதபோது, வரியை உயர்த்தவேண்டிய நிலை என கூறினார்.

இதையடுத்து, சொத்து வரி உயர்வை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி செய்தியாளர்களுக்கு போட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். 

சொத்துவரியை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிடவில்லை. மக்களுக்கு திமுகவின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS Press Meet For ADMK MLAs Walk Out


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->