என்னை சுற்றி எதிரிகள் சதி செய்துகொண்டு வருகிறார்கள்..ஓ.பன்னிர் செல்வம் வேதனை.!! - Seithipunal
Seithipunal


தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுழற்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சுழற்சையாக போட்டியிடுகிறேன்.நான் சுழற்சையாக போட்டியிடக் கூடியசூழல் சூது,சதி எப்படி யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது மக்களுக்கு தெரியும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்டு நான் மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தேன். அதிமுகவின் பொருளாளராக நான் 12 ஆண்டு காலம் பணியாற்றியதில் கட்சி வங்கிகணக்கில் வைப்பு நிதியாக 256 கோடி வைத்து விட்டு வந்துள்ளேன்.

தனி  சின்னத்தில் நான் போட்டியிடுகிறபோது , சின்னம் ஒதுக்குவத்தில் தாமதம் ஏற்படுத்துவதாக எனது பெயரைக் கொண்டு 5 பெயரை நிறுத்தி உள்ளனர். நான் எந்த சின்னங்களை குறிப்பிட்டு இருந்தேனோ அதே சின்னங்கள் அந்த 5 வேட்பாளர்களும் கேட்டிருந்தனர். அவர்கள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக செயல்பட்டனர். சின்னம்  ஒதுக்குவதில் நாள் நேரமும் குறிப்பிடப்பட்டது. இறைவன் அருளால் நமக்கு கிடைத்த வெற்றி சின்னம் பலாப்பழம்.

நான் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் குடியிருந்து மக்களுக்கு தேவையான பணிகளை செய்வேன் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enemies conspiring around ops sad


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->