அதிமுகவில் ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்.? இந்த இவருக்குத்தான் முக்கியத்துவம்!
edappadi palanisamy master plan
தமிழகத்தில் தொழில் துறையில் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தப் சுற்றுப்பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினர். இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும், அதிகாரிகளும் முதலமைச்சருடன் சென்றனர்.
அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு பொறுப்பு முதலமைச்சாராக யாரையும் நியமிக்காமல் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சுற்றுப்பயணத்தில் இருந்துகொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அங்கிருந்தபடியே அரசியல் நிலவரம் மற்றும் கட்சி சார்பான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள துணை முதலமைச்சர் ஓ பண்ணிச்செல்வதைவிட, அமைச்சர் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரைதான் அதிகமாக தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
English Summary
edappadi palanisamy master plan