அவர் ஆளுநர் இல்ல! ஆர்எஸ்எஸ் பிரச்சார பீரங்கி! போட்டு தாக்கிய ஆர்.எஸ் பாரதி! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் பிரச்சார பீரங்கியாக செயல்படுவதாகவும், தமிழகத்தில் ஆளுநர் ஒருவர் இருப்பதாகவே நாங்கள் கருதவில்லை எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பரபரப்பு கிளப்பி உள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வது குறித்தான கோப்புகள் எந்த நிலையில் உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆர்.எஸ் பாரதி "தூங்குபவனை கட்டி எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவனை தட்டி எழுப்ப முடியாது. 

அதுபோல தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தூங்குவது போல நடிக்கிறார். அவர் ஆளுநராக செயல்படவில்லை ஆர்எஸ்எஸ் பிரச்சார பீரங்கியாக செயல்படுகிறார். நாங்கள் அனுப்பவும் கோப்புகளை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புகிறார். நாங்களும் இப்படி ஒரு ஆளுநர் இருப்பதாகவே கவனிக்கவில்லை. நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்" என ஆளுநரை கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RSBharathi criticized Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->