திமுகவின் முக்கிய பொறுப்பில் திடீர் மாற்றம்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் தமிழக அமைச்சரும் , சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். 

திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேருவுக்கு கட்சியின் உயர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. 

டி.ஆர்.பாலு நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் காரணத்தினால், அவருக்கு பதிலாக கட்சியின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்க பட்டிருக்கிறது. 

கே.என். நேரு தமிழக அமைச்சரவையில் 3 முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். மேலும், போக்குவரத்து துறை, உணவுத்துறை, மின்சார துறை என்று அமைச்சர் பதவியை சிறப்பாக செய்து வந்தவர். இவர் கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இவர் திமுக உயர் மட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இத்தனை பொறுப்புகள், பதவிகள், அனுபவங்களை பெற்ற கே.என்.நேரு, முதன்மை செயலாளர் பொறுப்பையும் மெச்சத்தகுந்த வகையிலேயே செய்வார் என்னும் நம்பிக்கை கழக தொண்டர்களுக்கு ஏற்பட்டுத்தி கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk k.n.nehru posting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->