'அடக்கு முறையை கையாளும் தி.மு.க' - பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தினமலர் நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்ததைக் கண்டித்து பாஜக  தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய திமுக அரசு தடை செய்து வாய்மொழியாக உத்தரவிட்டதை தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. 

இதனால் தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது மதுரை காவல் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த தடை குறித்து அறநிலைய துறை அதிகாரிகள் தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள், கோயிலுக்குள் வந்த பக்தர்களை தடுத்த செய்திகள் என பல்வேறு ஆதாரங்கள் உள்ள நிலையிலும் திமுக அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டும் அல்ல கடமை. திமுக அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என நினைப்பது வேடிக்கையான ஒன்று. 

அடக்கு முறையை கையாளும் திமுக பொதுமக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதிக்கிறது. ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் திமுகவின் இதுபோன்ற அராஜகங்கள் நீண்ட நாட்களுக்கு செல்லுபடி ஆகாது என தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK condemned BJP leader Annamalai 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->