சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டுவீசி விளம்பரம் தேடும் சங்கிகள்-திமுக டி.ஆர்.பி.ராஜா.! - Seithipunal
Seithipunal


சங்கிகள் வழக்கம்போல உண்மையை திரித்து மதக்கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் என்றும் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டுவீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இது தரமற்ற செயல் என திமுக டி.ஆர்.பி ராஜா ட்வீட் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதனை அடுத்து வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டுதான் கோபத்தில் மூன்று பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய குற்றவாளி கருக்கா வினோத் த/பெ மணி, சங்கிகள் வழக்கம்போல உண்மையை திரித்து மத கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டுவீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இந்த தரமற்ற செயல் புதிதல்ல குற்றவாளி இரவே கைது செய்யப்பட்டுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chunks looking for advertising by bombing their own home


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->