சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் சலசலப்பு..!! நழுவி சென்ற கே.எஸ் அழகிரி..!!
Argument between congress leaders at satyamurthy bhawan
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த தலைவர் கக்கனின் 116வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கான அழைப்புதலில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகையின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து அவருடைய ஆதரவாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விழா ஏற்பாட்டாளரான ரஞ்சன் குமார் கட்சியின் பெயரை வைத்து செல்வப் பெருந்தகை சம்பாதிக்கிறார். தான் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை என பதிலளித்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அடிதடி நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் கே.எஸ் அழகிரி வேகமாக தனது அறைக்கு நழுவி சென்றார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை இதயத்துல்லா உள்ளிட்டோர் சமாதானம் செய்த அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கே.எஸ் அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இருந்து புறப்பட்டு சென்றார். கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்திக்க முயன்ற செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Argument between congress leaders at satyamurthy bhawan