இபிஎஸ் ரோடு ஷோ நடத்தினால்... - அண்ணாமலை கடும் விமர்சனம்.!
Annamalai criticized Edappadi Palaniswami
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி ரோட் ஷோ சென்றால் எத்தனை பேர் வருவார்கள்.
யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கு தெரியும். பணத்தை கொடுத்து கூட்டத்தை சேர்ப்பவர்களுக்கு ரோட் ஷோ என்றால் கூட்டம் வராது.
எடப்பாடி பழனிச்சாமி பழைய கதைகளை பேசுகிறார். மக்களை சந்திப்பதற்காகவே பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.
வருகின்ற ஜூன் நான்காம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையில் இருந்து ஓட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai criticized Edappadi Palaniswami