ஓட்டுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு!! காங்கிரஸ் மீது அகிலேஷ் குற்றச்சாட்டு.!!
Akhilesh Yadav alleged Congress caste based census for votes
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் மிகவும் தந்திரமான கட்சியின் ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரிய கணக்கெடுப்பை ஓட்டுக்காகவே கையில் எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி நமக்கு துரோகம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 வயதாகியும் மக்கள் அங்கிகாரம் வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
நான் ஏழை மக்களின் வலியை உணர்கிறேன். ஆனால் மத்திய அரசின் பிரதான் மந்திரி அன்ன யோஜனா திட்டம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைவதால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தற்போது உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க போகிறார்கள்? மக்களை அடிமை படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள் என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Akhilesh Yadav alleged Congress caste based census for votes