முதலிரவு சடங்குகளை இரவு நேரத்தில் வைக்க இதுதான் காரணமா.?! - Seithipunal
Seithipunal


பல தலைமுறைகளாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் ஒன்றாக முதன் முதலில் இணையும் சடங்கு இரவில் தான் நடத்தப்பட்டு வருகின்றது. முன்னோர்கள் இரவில் இப்படிப்பட்ட முதலிரவை நிகழ்த்துவதற்கு பல்வேறு அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பலரும் இரவு நேரங்களில் தான் உடலுறவு கொள்கின்றனர். 

உடலுறவுக்கு இரவு நேரம் உகந்ததாக கருதப்படுவதற்கு காரணம் உடல் உறுப்பு சார்ந்த நன்மைகள் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய சூழல்தான். தம்பதிகளின் உணர்ச்சிகளை அதிகரிக்க இரவு நேரம் தான் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவியலாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் 470 தம்பதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு நேரங்களில் உடலுறவு மேற்கொண்டு அதன் முடிவில் தங்களது மனம் மற்றும் உடல் எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிவித்ததில் ஒரு முடிவு கிடைத்துள்ளது.

அதன்படி இரவில் உடலுறவு வைத்த தம்பதிகள் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் சுமூகமாக உடலுறவு முடித்துக் கொண்டு உறக்கம் ஏற்பட்டு தானாகவே தூங்கி விடுகின்றனர். இவ்வாறு உடலுறவு பின் ஏற்படும் தூக்கம் இரவு முழுவதும் தடையில்லாத தூக்கமாக இருக்கிறதாம்.

இப்படி இரவில் உடலுறவு கொண்ட பின் மறுநாள் காலை மன மகிழ்வு மற்றும் புத்துணருடன் தம்பதிகள் தங்கள் வேலைகளில் ஈடுபட முடிகிறதாம். இரவு தவிர மற்ற நேரங்களில் உடலுறவு கொண்டவர்கள் பெரிய அளவில் நன்மைகளை பெறவில்லை என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது போன்ற உடல் மற்றும் மனம் சார்ந்த நன்மைகளை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் உடலுறவு உகந்த நேரமாக இரவை தேர்ந்தெடுத்து புதுமண தம்பதிகளுக்கான முதலிரவு சம்பிரதாயங்களை இரவு நேரங்களில் ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reason for first night in nights


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->