பொன்னியின் செல்வன் படம் குறித்து ராஜமௌளி என்ன கூறினார் தெரியுமா.?!
Raja mouli about ponniyin selvan
கல்கி எழுதிய வரலாற்று கதையை மையமாகக் கொண்ட பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே மணிரத்தினம் அதனை படமாக்கியுள்ளார்.
இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கும் நிலையில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சமீபத்தில் இந்த படத்தின், "பொன்னி நதி" என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து, "நீண்ட நாட்களாகவே பொன்னியின் செல்வனின் கதைய OTT-க்காக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பொன்னியின் செல்வனை ஒரு 3 மணி நேர படமாக எடுக்க முடியாது. 8 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை சொல்லக் கூடிய ஒரு கதையாக வேண்டுமானால் இதனை இயக்கலாம். ஓடிடி தான் அதற்கு சரியான தளம்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Raja mouli about ponniyin selvan