உடனடி சரும பொலிவை தரும் ஃபேஸ்பேக்.! இன்ஸ்டன்ட் பொலிவுக்கு கிரீம் தேவையில்லை.!
instant facepack for face
அனைவருக்கும் தங்கள் சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக அவர்கள் கடைகளில் விற்கும் பல அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவர். ஆனால், வீட்டில் உள்ள அரிசிமாவை பயன்படுத்தி சருமத்தை பொலிவாக்கலாம். அரிசி மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும் பொலிவை அதிகரிக்கும்.
அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்:
மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்து பின்னர் இந்த கலவையை தடவி 20 நேரம் கழித்து கழுவி வரவும். அரிசி மாவு உங்கள் முகத்தில் உள்ள கறைகள், சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை குறைக்கும்.
அரிசி மாவு, ஓட்ஸ், தேன் மற்றும் பால் ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு எடுக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் இயற்கை தேன் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக பால் சேர்த்து கலக்கவும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இந்த பேஸ்பேக் முகத்திற்கு பொலிவை தரும்.
English Summary
instant facepack for face