படிக்க பிடிக்காததால் மாணவனைக் கொன்ற சக மாணவன்..! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டம் ஷா சவுஹா கிராமத்தில் 'மதராசா' எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி உள்ளது. இங்கு இஸ்லாமிய மதம் தொடர்பான மத பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த மதப்பள்ளியில் பயின்றுவந்த 11 வயது சமீர் என்ற சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த, சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். 

இந்த புகாரை தொடர்ந்து  போலீசார் விசாரணை நடத்தியதில் காணாமல் போன சிறுவன் சமீர் கடந்த 5-ம் தேதி தான் படித்து வந்த இஸ்லாமிய மதப்பள்ளியில்  பிணமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடல் மதப்பள்ளியில் உள்ள கீழ்தளத்தில் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த போலீசார் சிறுவனின் உடலை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய கொலை வழக்கு பதிவு செய்து, சிறுவனை கொலை செய்து உடலை புதைத்தது யார்? மரணத்திற்கான காரணம் என்ன?  என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையில், பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளது. 11 வயது சிறுவன் சமீரை அதே மதப்பள்ளியில் பயின்று வந்த சகமாணவனான 13 வயது சிறுவனே கொலை செய்துள்ளான். மத பாடம் படிக்க விருப்பம் இல்லாததால் மத பள்ளிக்கு அவமானத்தை மற்றும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சக மாணவனான சமீரை கொலை செய்து உடலை மத பள்ளியின் கீழ் தளத்தில் புதைத்தாக அந்த சிறுவன் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அம்மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth killed other youth near hariyaana


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->