எனக்கு காதலனும் வேணும், கணவனும் வேணும்.. போலிஸிடம் அடாவடி செய்த இளம்பெண்.!
Young women want boy friend and husband in uttarpradesh
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பெற்றோர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வேறு மாப்பிள்ளை உடன் திருமணம் முடிந்த கையோடு அந்த இளம் பெண் அருகில் உள்ள காவல் காவல் நிலையத்திற்கு தனது காதலனையும், மணமகனையும் அழைத்துச் சென்று கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் தன்னை காதலனுடன் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என அவர் தகராறு செய்துள்ளார்.
இதனிடையே காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் அந்த இளம் பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் தன்னை காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் நான் இருவரையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அந்த பெண் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் தனது கையில் இருந்த ஃபோனையும் கீழே போட்டு உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் அப்பெண்ணை வீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
English Summary
Young women want boy friend and husband in uttarpradesh