மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இளம்பெண் குதித்து உயிரிழப்பு.. பதைபதைக்கும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கிழக்கு டெல்லியில் அக்ஷர்தம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ப்ளூ லைன் பிரிவில் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். இதனை பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அந்த இளம்பெண்ணிடம் கீழே வரும்படி கெஞ்சி கேட்டு உள்ளனர். மேலும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதில் அதிகாரிகள் சிலர் ஒருவேளை இளம்பெண் குதித்து விட்டால் அவரை காப்பாற்றுவதற்காக போர்வை ஒன்றை கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அந்தப் பெண் மெட்ரோ ரயில் நிலைய கட்டிடத்திலிருந்து கீழே குதித்து விட்டார். அவர் பாதுகாப்பு வலையில் விழுந்த போதும் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு காக அழைத்துச் சென்றனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். தற்போது அந்த இளம்பெண் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women suicide in Delhi metro station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->