பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு, ஏற்பட்ட கொடுமை.! ஓரமாக நிறுத்தி.. ஓட்டுநர் செய்த காரியம்.!
women raped in mathyapradesh
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குக்ஷி பகுதியிலிருந்து மணவர் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று பயணித்தது. இந்த பேருந்தில் பயணிகள் சிலர் இருந்தனர். இதில், ஒரு இளம்பெண் பயணித்துள்ளார்.
லாங்சாரி என்ற பகுதியில் தன்னை இறக்கி விட வேண்டும் என்று கூறி நடத்துனரிடம் டிக்கெட் பெற்று விட்டு இருக்கையில் அமர்ந்தார். ஆனால், பேருந்து அங்கே மட்டும் நிற்காமல் சென்றது. மற்ற இடங்களில் பயணிகள் இறங்கி சென்றனர்.
பின்னர், அந்த பேருந்து ஓட்டுநர் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி விட்டு பேருந்தில் தனியாக பயணித்த அந்த பெண்ணை பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் கிளீனர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின், அந்தப் பெண்ணை வழியில் இறக்கி விட்டுவிட்டு பேருந்தை எடுத்துக் கொண்டு சென்றனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார்.
இது குறித்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கிளீனர் மற்றும் நடத்துநர் இருவரையும் தேடி வருகின்றனர்.
English Summary
women raped in mathyapradesh