ஹரியானா || 19ம் வயது இளம்பெண்ணுக்கு நடந்த அவலம்..!
Woman sexually abused in Hariyana
19 வயது பெண்கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம், ரிவாரி மாவட்டம், பாவல் பகுதியில் ராணுவ தேர்வுகளுக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் 19 வயது மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அந்த இளைஞர்களுக்கு இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணை கடந்த சில வாரங்களுக்கு முன் கவ்ஷாலா பகுதியில் உள்ள காட்டிற்கு அழைத்து சென்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இதுபற்றி வெளியே கூறினால், குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், அந்த பெண் அதுபற்றி யாரிடமும் கூறவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவர்கள் தொல்லை செய்து வந்ததால் ஒரு கடத்தில் பொறுமை இழந்த அவர் தனக்கு நடந்த கொடூரத்தை தனது குடுக்ம்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அரைத்ட்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman sexually abused in Hariyana