பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஜார்கண்டில் நடந்த கொடூரம்..!
Woman Sexually abused
பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் இரவில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருடன் வந்துகொண்டிருந்த நபர் தனது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளார்.
அவர்கள் அனைவரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை மிரட்டி அவருடைய தோழியையும் வரவழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அந்த பெண் வந்ததும் அவரையும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அந்த பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.