ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் வழக்கறிஞர் - விசாரணையில் சிக்கிய காதலன்.! - Seithipunal
Seithipunal


ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் வழக்கறிஞர் - விசாரணையில் சிக்கிய காதலன்.!

சென்னை அருகே புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹசீனா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய் பாத்திமா உடன் புகார் அளிப்பதற்காக வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் மனு அளிக்கும் இடத்தில் அமர்ந்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் உடனே அங்கு ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர், போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், "பெண் வழக்கறிஞர் ஹசீனா குஜரால் என்பவரை காதலித்து வந்ததும், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர் பேசாமல் இருந்ததும் தெரிய வந்தது. 

மேலும், ஹசீனாவை அவரது முன்னாள் காதலன் குஜரால் தொடர்ந்து ஆபாசமாக பேசி கிண்டல் செய்து வந்ததும், இது குறித்து அவர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த ஹசீனா அளவுக்கு அதிகமான மாத்திரையை உட்கொண்டதால் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து வேப்பேரி போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman lawyer sucide attempt in commissioner office in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->