அரசு அதிகாரிகள் கார் மோதி விபத்து.. 3 விவசாயிகள் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


அரசு அதிகாரிகளின் கார் மோதியதில் 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி பொதுப்பணித்துறையில் ஜூனியர் இன்ஜினியருக்கு சொந்தமான கார் மோதி 3 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காரை ஓட்டுனராக வேலை செய்து வந்த அஜித்குமார் பாண்டே என்பவர் ஓட்டி வந்துள்ளார்

மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஓட்டுநரான அஜித் குமார் பாண்டே மது போதையில் காரை ஓட்டியது தெரிய வந்தது.

அந்த வகையில் கான்பூர் தேஹாட்டில் உள்ள சிக்கந்தராவில் ஜூனியர் இன்ஜினியரிங் குடும்பத்தை இறக்கிவிட்டு அயோத்திக்கு ஓட்டுனரான அஜித்குமார் பாண்டே வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த கோர விபத்தில் சுரேந்திர சிங் (வயது 62), அஹிபரன் சிங் (வயது 63), கசீதே யாதவ் (வயது 65) ஆகிய 3 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுனர் அஜித் பாண்டே தப்பியோடிய நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarpradesh govt vehicle accident 3 formers death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->