உத்தர பிரதேசம் | பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்து: சிறுவர்கள் பரிதாப பலி!
uttarpradesh firecracker shop fire broke
உத்திரபிரதேசம், கெல்வாடா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேல் மாடியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஹிமான்சு (வயது 12) என்ற சிறுமியும், பராசு (வயது 14) என்ற சிறுவனும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
uttarpradesh firecracker shop fire broke