உத்திரப் பிரதேசம் : ட்ரக் மீது கார் மோதி விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தில் நெடுஞ்சாலைக்கு நின்று கொண்டிருந்த ட்ரக் மீது கார் மோதி 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷர்-மீரட் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உத்தரகண்டில் உள்ள கேதர்நாத் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை புலந்த்ஷரில் உள்ள குலாவதி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், அப்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh truck and car accident 5 persons death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->