6 ஆவது திருமணம் செய்யப்போகும் கணவனின் மீது 3 ஆவது மனைவி புகார்.. முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆட்சிக்காலத்தில், அமைச்சர் பொறுப்பில் பதவி வகித்தவர் பஷீர் சவுதாரி. இவர் அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர், அந்த கட்சியில் இருந்தும் விலகினார். 

இவரின் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரது 3 ஆவது மனைவியான நக்மா, தனது கணவர் பஷீர் 6 ஆவது திருமணம் செய்ய இருக்கிறார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பான புகாரில், " பஷீர் சவுதாரிக்கு என்னை சேர்த்து ஏற்கனவே 5 மனைவிகள் இருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் வருடத்தில் பஷீரை நான் திருமணம் செய்தேன். இதன்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். 

பஷீருக்கு பெண்களை துன்புறுத்தி, அவர்களின் வலியை பார்த்து இன்பமடைவதில் அலாதி பிரியம் உள்ளது. அவர் இந்த சூழ்நிலையில் 6 ஆவதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதனை கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவரின் மீது நடவடிக்கை எடுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Former Minister Chaudhary Bashir Complaint Against by 3 rd Wife Nagma


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->