ம.பி-யில் அதிர்ச்சி: 3.5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - மாமா கைது - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் 3.5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாமாவை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் சான்யோகீதாகஞ்ச் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் மூன்றரை வயது சிறுமி. இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த சிறுமியின் மாமா, சிறுமியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது சிறுமியின் சகோதரர் வந்ததால், அங்கிருந்து சிறுமியின் மாமா தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மாமாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uncle arrested for sexually harassing a three and a half year old girl in madhya pradesh


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->