குஜராத்தில் சோகம் - சிறுத்தை தாக்கி இரண்டு வயது குழந்தை பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் சோகம் - சிறுத்தை தாக்கி இரண்டு வயது குழந்தை பலி.!

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கட்டார் கிராமத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை தனது தாய், தந்தையுடன் குடிசையில் தூங்கி கொண்டிருந்தது.

அப்போது குடிசைக்குள் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை கடித்து, அருகிலுள்ள புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் காத்திக் கூச்சலிட்டுள்ளனர். 

இந்த சத்தம் கேட்டு சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது. உடனே குழந்தையின் பெற்றோர் ஓடிச்சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அம்ரேலி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழப்பது கடந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது சம்பவமாகும். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two years old children died for cheettah attack in gujarat


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->