உ.பியில் சோகம் - தியேட்டர் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி.!
two peoples died for collapse theatre wall in uttar pradesh
கட்டுமானப்பணியின் போது தியேட்டரின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து இரண்டு தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள, அம்ரோஹா மாவட்டம் சதர் கோட்வாலி பகுதியில் ஒரு திரையரங்கத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென திரையரங்கத்தின் சுவர்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளுக்குள் 7 பேர் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
two peoples died for collapse theatre wall in uttar pradesh