கார் - ட்ராக்டர் நேருக்கு நேர் மோதியதில் தம்பதியினர் பலி.! - Seithipunal
Seithipunal


கார் - ட்ராக்டர் நேருக்கு நேர் மோதியதில் தம்பதியினர் பலி.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-மகேஸ்வரி தம்பதியினர். இவர்கள் நேற்று முன்தினம் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இந்தக் காரை கணேஷ் பாபு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து இவர்கள் நேற்று மதியம் தரிசனம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இவர்கள் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சிமெண்ட் கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிராக்டர் இந்தக் கார் மீது மோதியது. இதில் பிரபாகரன் மற்றும் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

மேலும், கார் ஓட்டுநர் கணேஷ் பாபு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி

விட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுனரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died for accident in tirupati


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->