சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Tragedy happened tourists 20 people admitted hospital
மேற்கு வங்கம் மேதினிபூரில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 20 பேர் காயமடைந்தனர்.
பரேலி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் மேதினிபூரில் இருந்து 60 பயணிகளை ஏற்றுக் கொண்டு சுற்றுலா சென்ற பேருந்து அல்லிப்பூர் கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் பேருந்தில் சென்ற 20 பேர் காயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் பெண் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி புறப்பட்டு கையா, புத்தகயா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று விட்டு அயோத்தி மற்றும் வாரணாசிக்கு வந்து கொண்டிருந்ததாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Tragedy happened tourists 20 people admitted hospital