கற்புக்கரசி என நிரூபி.. மனைவி கையில் கற்பூரம் ஏற்றிய கணவரால் ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மனைவி கற்புகரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றியத்தால் அவரது கை கருகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்கையில் கற்பூரத்தை ஏற்றியுள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை கருகி விட்டது. ஆனாலும்கூட ஆனந்த் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tragedy caused by the husband fired the wife with camphor


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->