பேருந்து நிலையத்தில் இளம்பெண் மீது சரமாரித் தாக்குதல் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பேருந்து நிலையத்தில் இளம்​பெண் மீது சரமாரித் தாக்குதல் - போலீசார் அதிரடி.!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் கையில் குழந்தையுடன் நின்ற ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சாகர் நகர் பேருந்து நிலையத்தில் உள்ள கேண்டீனில் இளம்பெண் ஒருவர் பால் வாங்குவதற்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால், அந்த பெண்ணை மூன்று ஆண்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர். 

இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் தன்னை விட்டு விடும்படியும், 'அண்ணா.. அண்ணா' என்று அழுவதும், அங்கு இருந்த பொதுமக்கள் அந்தப் பெண்ணை அடிக்க வேண்டாம் என்று தடுக்க முயன்றதும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மூன்று பேரை கைது செய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சாகர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் திவாரி விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three boys arrested for attack woman at bus stand in madhya pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->