திருப்பதி ஏழுமலையான் கோவில்.. ரூ.300 தரிசன டிக்கெட்.. வரும் 25ம் தேதி ஆன்லைனில் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை திருப்பதி தேவஸ்தானம் வரும் ஜூலை 25ஆம் தேதி ஆன்லைனில் வெளியிட உள்ளது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 11000 என்ற எண்ணிக்கையில் ஏற்கனவே வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 4000 டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வரும் ஜூலை 27ஆம் தேதி வெளியிட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi Elumalaiyan temple 300 Rupees dharshan ticket from July 25


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->