39வது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு இன்று கூடுகிறது.! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 39 வது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்குகிறது.

2016 க்கு பிறகு பல்வேறு காரணங்களால் நடைபெறாமலிருந்த மாநாடு, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் முன்னுரிமை அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை இணையம் வாயிலாக இணைப்பது, நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு, நிதிசார் சீர்திருத்தங்கள், நீதிமன்றங்களுக்கு தேவையான மனித வளம், திறன் மேம்படுத்துதல், பணியாளருக்கான கொள்கை மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டினை தொடர்ந்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி, டெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirty nineth conference of chief justice held today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->