உத்தரப்பிரதேசம்: மது வாங்க பணம் தராததால் தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலத்தில் மது வாங்குவதற்கு பணம் கொடுக்காததால் தாயை கட்டையால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சந்த்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திர சைனி (25). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் நேற்று இரவு அவருடைய தாயார் சமுந்திரா தேவியிடம் (வயது 65) மது பாட்டில் வாங்க பணம் கேட்டுள்ளார். 

ஆனால் அவரது தாய்ப்பாலும் தர மறுத்துள்ளார். இதனால் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தேவேந்திர சைனி மரக்கட்டையால் அவரது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் அவரது தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சமுந்திரா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து சைனியின் சகோதரர் ஜெய்ராம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாயை கட்டையால் அடித்து கொன்ற மகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son who beat his mother to death with a stick in uttarpradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->