மகளுக்காக சேர்த்து வைத்த பணம் - சுக்கு நூறாக்கிய கரையான்கள்.!
termites bite money in andira
ஆந்திரா மாநிலத்தில் உள்ள, மன்யம் மாவட்டம் புத்தூரைச் சேர்ந்த ஆதி மூலம் லக்ஷ்மணா என்பவர் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்வதற்காக சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் பத்திரப்படுத்தி சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், ஆதிமூலம் லக்ஷ்மணா நேற்று மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் மொத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது இரும்பு பெட்டிக்குள் கரையான்கள் காணப்பட்டன.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதி பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்த போது பெட்டிக்குள் வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், மனா உளைச்சலுக்கு ஆளான ஆதி மூலம், "அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்து விட்டேன். என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
termites bite money in andira