ஆணுறுப்பை அறுத்து மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை! - Seithipunal
Seithipunal


ஐதராபாத் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மருத்துவ கல்லுரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

தெலுங்கானா மாநிலம்: ஐதராபாத் புறநகர் பகுதி பாப்பிரெட்டி நகரை சேர்ந்தவர் தீட்சித் ரெட்டி (வயது 21). இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். 

தீட்சித் ரெட்டிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

இதனால் தீட்சித் ரெட்டியை மனநல மருத்துவரிடம் பெற்றோர்கள் அழைத்துச் சென்று கலந்தாய்வு நடத்தி வந்தனர். பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றிருந்த போது தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தனியாக இருந்த தீட்சித் ரெட்டி தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். வெளியூருக்கு சென்றிருந்த பெற்றோர்கள் நேற்று காலை வீடு திரும்பி வந்து பார்த்த போது உள்பக்கமாக பூட்டி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்ததில் தீட்சித் ரெட்டி ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். 

இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீட்சித் ரெட்டி உடலை மீட்டு பிரேத சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana medical student suicide issue


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->