அதானி குழுமம் விவகாரம்.. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதானி குழும பங்குகளின் தொடர் வீழ்ச்சியின் காரணமாக அதன் தலைவர் கௌதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்தான உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் உண்மையை வெளி கொண்டுவர குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதானி குழுமம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆலோசனைகளும் சீலிட்ட உரையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க தயாராக உள்ளது என வாதித்தார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் சீலிட்ட உரையில் மத்திய அரசு அளிக்கும் ஆலோசனைகளை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த விவகாரத்தில் கொஞ்சம் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். அதானி குழுமம் விவகாரத்தில் முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அதற்கான குழுவை நாங்களே ஏற்படுத்திக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒட்டுமொத்த விவகாரத்தையும் உயர் அதிகாரம் படைத்த குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தரப்பு தனது வாதத்தின் பொழுது "பொதுமக்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மத்திய நேரடி வரி வாரியம், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றை கொண்டு விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தோல்வி என கருத முடியாது. அதானி குழுமம் விவகாரம் தொடர்பான குழுவில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் யாரும் இடம் பெற மாட்டார்கள். எனவே ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து அதானி குழுமம் மீதான புகார் மற்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court ordered inquiry committee in retired judges for Adani Group issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->