தனியாக இருந்த மாமியார்.. தகாத செயலில் ஈடுபட்ட மருமகன்.! அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்.!
Son In law raped mother In law in anthra
ஆந்திராவில் ஒரு பெண் செருப்பு கடை நடத்தி வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் தனது ஒரே மகளுக்கு அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். இதில் அந்த மகளுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன.
இந்நிலையில் திடீரென்று மருமகன் வரதட்சணை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி மனைவியை அடித்து துன்புறுத்தி தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனால், அந்த மகள் தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்னர், மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக மருமகன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.
அங்கேயே தங்கியிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பி ஓடி வெளியே வந்த மாமியார் தன்னை மானபங்கப்படுத்தி விட்டதாக மருமகன் மீது போலீசிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மருமகன் கோலா ஜான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த தவறு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அதிகப்படுத்தப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
English Summary
Son In law raped mother In law in anthra