இந்தி ஆசிரியருடன் கிளம்பிய பள்ளி மாணவி - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தி ஆசிரியருடன் கிளம்பிய பள்ளி மாணவி - போலீசார் வலைவீச்சு.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, கோண்டா மாவட்டம் தேஹத் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய இந்தி ஆசிரியர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 17வயது மாணவியுடன் தலைமறைவானார். 

ஆசிரியருடன் வீட்டைவிட்டு ஓடியுள்ள அந்த மாணவி, 30,000 ரூபாய் மற்றும் நகைகளை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஆசிரியர், மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுக்கு அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் அவமானம் தாங்கமுடியாமல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதற்கிடையே இந்த வீடியோ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அங்கித் மிட்டல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student ran to hindi teacher in uttar pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->